ஆரைக்குளத்தில் சிறப்பு கபடி போட்டி

ஆரைக்குளத்தில் சிறப்பு கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-22 09:44 GMT
கபாடியில் வென்றவர்களுக்கு கோப்பை வழங்கல்

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள ஆரைக்குளத்தில் பொங்கல் சிறப்பு கபடி போட்டிகள் நடந்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்றனர்.

அதில் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கபடி விளையாட்டுக் குழு சார்பில் நேற்று இரவு பரிசளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கபடி வீரர்கள் மற்றும் போட்டி குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News