விஜயகாந்திற்கு மதுரையில் சிலை வைக்கணும்... !

மறைந்த நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்திற்கு சிலை வைக்க வேண்டும் என, மதுரை கலெக்டரிடம் தேமுதிக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-01-02 11:03 GMT

மறைந்த நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்திற்கு சிலை வைக்க வேண்டும் என, மதுரை கலெக்டரிடம் தேமுதிக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சிலை வைக்க வேண்டும்-தேமுதிக நிர்வாகிகள் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு தமிழ் திரைத்துறை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நல குறைவால் காலமானார், மதுரையில் பிறந்து வளர்ந்தவ விஜயகாந்திற்கும் மதுரைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு, விஜயகாந்த்க்கு மதுரையில் வெங்கல சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட தேமுதிக மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மணு ஒன்றை அளித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் கூறுகையில் "தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரையில் பிறந்து வளர்ந்தவர், விஜயகாந்திற்கு கல்வி, திருமணம் உள்ளிட்டவை மதுரையில் தான் நடைபெற்றது, மேலும் தேமுதிக கட்சி மதுரையில் தொடங்கப்பட்டது, இப்படி மதுரைக்கும் விஜயகாந்த் இருக்கும் நிறைய தொடர்பு உள்ளதால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் முழு உருவ சிலை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என கூறினார்

Tags:    

Similar News