இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபரிடம் பழகிய மாணவி பெற்றோரிடம் ஒப்படைப்பு !

பழநி அருகே 10ம் வகுப்பு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி வந்த பிரசாந்த், அம்மாணவியை அழைத்து சென்று விட்டார்.

Update: 2024-03-15 09:29 GMT

 கைது 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் பிரசாந்த் (23). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி வந்த பிரசாந்த், அம்மாணவியை அழைத்து சென்று விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆயக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செய்து பிரசாந்தை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News