சேலத்தில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவி தேசிய போட்டிக்கு தேர்வு !
சேலத்தில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவி தேசிய போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 08:42 GMT
மாணவி
தமிழ்நாடு விளையாட்டு கராத்தே அசோசியேஷன் சார்பில் நடந்த கராத்தே போட்டியில் இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் எஸ்.துரால் என்ற மாணவி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் தென் இந்திய கராத்தே போட்டிக்கும், தேசிய கராத்தே போட்டிக்கும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவியை பள்ளி முதல்வர் அருணா மகேசுவரி, இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் ஆர்.சுதாகர் உள்பட பலர் பாராட்டினர்.