மனைவியுடன் தகராறு – வாலிபர் தற்கொலை
திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-25 02:42 GMT
தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30) இவருக்கு திருமணம் ஆகி கிருத்திகா என்ற மனைவியும், குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான மணிகண்டன் கார்த்திகாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனால் கார்த்திகா கோபித்துக் கொண்ட தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் ஆஸ்பாஸ்சீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.