வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

வாணியம்பாடி மற்றும் கேத்தாண்டப்பட்டி ரயில்வே நிலையங்களுக்கிடையே இரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2024-07-01 14:09 GMT

மீட்கப்பட்ட சடலம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் கேத்தாண்டப்பட்டி ரயில்வே நிலையங்களுக்கிடையே இரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு ! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து வாணியம்பாடி மற்றும் கேத்தாண்டுப்பட்டி ரயில் நிலையங்கள் இடையே அடையாளம் தெரியாத வாலிபர் ஏதோ ஒரு ரயில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இதைகுறித்து ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இவர் எந்த பகுதியை சேர்ந்தவர் இந்த பகுதிக்கு எப்படி வந்துள்ளார் ரயிலில் பயணம் செய்யும் பொழுது தவறி விழுந்துள்ளாரா?என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News