திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி !

திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2024-06-12 07:34 GMT

பலி

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே நாகந்தூர் அடுத்த தளவாளப்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 30). இவர் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம்- செஞ்சி சாலையில் விழுக்கம் கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில்ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News