முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர்

சேலத்தில் முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2024-02-21 10:32 GMT

 பைல் படம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென அவரிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பெரியார் மேம்பாலம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த நபர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News