விராலிமலை அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாப பலி

விராலிமலை அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாப பலியானர்.

Update: 2024-06-04 09:33 GMT

காவல் நிலையம்

பெரம்பலுாரில் துறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் அருமன் (23). நேற்று முன்தினம் இரவு பைக்கில் மதுரையில் இருந்து பெரம்பலுாருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலையை அடுத்த வாடியான்களம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருமனை மீட்டு கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர், ஏற்கனவே அருமன் இறந்து விட்டதாக தெரி வித்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News