வாலிபரை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதி!
ஜோலார்பேட்டை அருகே வாலிபரை பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி உள்ளனர்.
Update: 2024-03-04 05:28 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வாலிபரை பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் மனோஜ் வயது (25) இவர் அதே பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத பாம்பு கடித்துள்ளது மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் மனோஜ்ஜை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அனுப்பி வைத்தனர். அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.