கடன் தகராறில் வாலிபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே கடன் தகராறில் வாலிபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Update: 2024-02-08 17:11 GMT

தூத்துக்குடி அருகே கடன் தகராறில் வாலிபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் பால்துரை (34). விவசாயி. இவரது உறவினரான ராஜதுரை என்பவரிடம் வடக்கு கோவங்காட்டைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் என்ற சின்னத்துரை (40) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1½  லட்சம் கடன் வாங்கினாராம். அவர் பணத்தை திருப்பி கொடுக்காததால் பால்துரை அந்த பணத்தை கேட்டுள்ளார்.

இதனால் பால்துரை - மந்திரம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு கோவங்காடு பகுதியில் பால்துரை பைக்கில் வந்து கொண்டிருந்த போது 3பேர் கும்பல் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளர். இது தொடர்பாக  சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தியதில் மந்திரம் என்ற சின்னத்துரை மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ் (25), மாசிலாமணி மகன் கதிர்வேல் (42) ஆகிய 3பேரும் சேர்ந்து பால்துரையை கொலை செய்தது தெரியவந்தது. இதில் கதிர்வேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். கொலை தொடர்பாக சாயர்புரம் இன்ஸ்பெக்டர் (பாெ) ஜானகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News