வெடி விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

சேலம் அருகே வெடி விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2024-02-15 10:58 GMT

வெடி விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கச்சுபள்ளி இளவம்பாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் சக்திவேல் (வயது 27). இவர் கடந்த 12-ந் தேதி இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி அடுத்த செங்கனூர் இருசாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசுகளை தனது மொபட்டில் வைத்துக்கொண்டு வானவெடிகளை வெடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது மொபட்டில் வைத்திருந்த வெடிகளில் தீப்பொறி பட்டு பயங்கரமாக வெடிகள் வெடித்து சிதறியது இதனால் அந்த பகுதி முழுவதும் தீ பிளம்பாக காணப்பட்டது . இந்த வெடி விபத்தில் சக்திவேல் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
Tags:    

Similar News