வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது!

கலசப்பாக்கம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மின்சார ஒயரில் உரசி தீப்பிடித்து எரிந்தது.

Update: 2024-05-06 15:40 GMT

கலசப்பாக்கம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மின்சார ஒயரில் உரசி தீப்பிடித்து எரிந்தது.


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நார்த்தாபூண்டி ஊராட்சி நெல்லிமேடு கிராமத்தில் வைக்கோல் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மின்சார ஒயரில் உரசி தீ பிடித்தது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் தீ பற்றி எரிந்த வைக்கோலை கீழே தள்ளி தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.ஆனால் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்து கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News