சேத்துப்பட்டு அருகே பைக் மீது லாரி மோதி விபத்து – இளைஞர் பலி

Update: 2023-12-05 06:50 GMT

விபத்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தன் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் முரளி, 27. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்கிற மனைவியும், ஏழு மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் முரளி நேற்றுமுன்தினம் சேத்துப்பட்டுக்கு சொந்த வேலையாக சென்று, மீண்டும் ஊர் திரும்புகையில், வேலூரில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரி, அதிவேகமாக வந்து முரளி மீது மோதியது. இதில் முரளி பலத்த காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது, வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து சின்ன பையன் கொடுத்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் பாலகணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News