கார் மீது டூவீலர் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்

முன்னாள் சென்ற கார் எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக்கிட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.

Update: 2024-02-19 10:19 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது ௪௦. இவரது மனைவி மணிமேகலை வயது 29. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில், பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 7 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம், சுக்காலியூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு முன்னாள் சென்ற, பெரம்பலூர் மாவட்டம், முன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் வயது 60 என்பவர் ஓட்டிச் சென்ற கார், திடீரென எவ்வித சிக்னலும் காட்டாமல் பிரேக் இட்டதால், பின்னால் முருகன் ஓட்டிச் சென்ற டூவீலர் ரத்தினம் ஓட்டிச் சென்ற காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில், கணவன்- மனைவி இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய ரத்தினம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Tags:    

Similar News