டூவீலர், சரக்கு வேன் மீது மோதி விபத்து

ராசா கவுண்டனூர் திருப்பத்தில், வேகமாக வந்த டூவீலர், சரக்கு வேன் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2024-06-02 13:40 GMT

ராசா கவுண்டனூர் திருப்பத்தில், வேகமாக வந்த டூவீலர், சரக்கு வேன் மீது மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கீழ சக்கரக்கோட்டை அருகே உள்ள மாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். வயது 28. இவர் ஈச்சர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில், உப்பிடமங்கலத்தில் இருந்து சேங்கல் செல்லும் சாலையில் அவரது ஈச்சர் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள ராசாகவுண்டனூர் திருப்பம் அருகே சென்ற போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், மேல மாயனூர், குடி தெருவை சேர்ந்த சரவணன் வயது 38 என்பவர், டூவீலரில் வேகமாக வந்து ஈச்சர் வேன்மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈச்சர் வேன் டிரைவர் சரவணகுமார் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல் துறையினர்.

Tags:    

Similar News