நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.
மலைக்கோவிலூர் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Website
Update: 2023-12-17 17:29 GMT
மலைக்கோவிலூர் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து. காவல்துறை வழக்குப்பதிவு.வழக்குப்பதிவு.
மலைக்கோவிலூர் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, மூலப்பட்டி அருகே உள்ள மலைக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 45. இவர் டிசம்பர் 13ஆம் தேதி இரவு 7 மணி அளவில் மலைக்கோவிலூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற செல்வகுமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் செல்வகுமாருக்கு இடது கால் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமார் அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.