வீட்டின் கதவை உடைத்து உணவருந்தி சென்ற காட்டு யானை!

அச்சத்தில் உயிருக்கு பதுங்கிய தோட்ட பணியாளர்கள்.

Update: 2024-06-08 09:27 GMT

 யானை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து வீட்டில் வைக்கப்பட்டுள்ள அரிசி,புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது.

யானை நடமாட்டம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று புகுந்த இரண்டு யானைகள் அங்குள்ள பயிர்களை சாப்பிட்டு விட்டு அருகில் தோட்ட பணியாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.இதில் ஒரு யானை திடிரென வீட்டின் கதவை உடைத்து உணவை தேடியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அச்சத்தில் வீட்டின் உட்புறம் பதுங்கி கொண்டனர்.பின்னர் அந்த யானை அங்கிருந்த அரிசி மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு விட்டு சாவகாசமாக வீட்டை விட்டு சென்றது.யானை கதவை உடைத்து உணவு தேடியபோது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் "ஒன்னும் இல்லை போ சாமி அவ்வளவு தான்" என கூறிய நிலையில் அதனை அருகில் இருந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த காட்சிகள் தற்போது சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் வனத்தை ஒட்டி தோட்ட பகுதியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தோட்டங்களில் யானைகள் புகந்தால் வனத்துறையினருக்கு தர தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News