வனப்பகுதியில் இன்று மாலை திடிரென காட்டு தீ!
விராலிமலை அருகே வனப்பகுதியில் திடிரென காட்டு தீ பிடித்து எறிந்தது இதனையடுத்து தீயணைப்பு வீரர் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Update: 2024-03-14 06:38 GMT
விராலிமலை அருகே உள்ள அகல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தேவி இவருக்கு சொந்தமான வனப்பகுதியில் இன்று மாலை திடிரென காட்டு தீ பிடித்து எறிந்தது இதனையடுத்து அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை கொண்டும் இலை செடிகளை கொண்டும் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.