தலைவாசல் அருகே சாலையை கடந்த போது லாரி மோதி பெண் சாவு
தலைவாசல் அருகே சாலையை கடந்த போது லாரி மோதி பெண் பலியாகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-30 10:14 GMT
தலைவாசல்
கெங்கவல்லி:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி (வயது 54). இவர் தலைவாசல் அருகே பெரிய ஏரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து கல்லூரி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஏறுவதற்கு அவர் சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இந்திராகாந்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்