தொழுதாவூரில் பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

தொழுதாவூரில் பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-05 17:17 GMT

கோப்பு படம்

திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியை சேர்ந்தவர் முருகன், 42. இவர் கூலி வேலை செய்து வருகிறார். சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் ஹோட்டல் நடத்தி வரும் வனஜா என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வனஜா 2 லட்சம் ரூபாயை முருகனிடம் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News