ஈத்தாமொழி அருகே வீடு புகுந்து பெண்ணின் 6 பவுன் நகை பறிப்பு !
மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை பறித்துள்ளார்.தப்பி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 04:53 GMT
நகை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த சகாயமாதா தெருவை சேர்ந்தவர் ரெஜிங்டன் (45) இவர் மனைவி அமலஜோதி (42). ரெஜிங்டன் வெளிநாட்டில் மீன்பிடி வேலை செய்து வந்தார். தற்போது ஊரில் உள்ளார். நேற்று அதிகாலையில் அமலஜோதி வீட்டின் கதவை திறந்து விட்டு முன் அறையில் இருந்தார். அப்போது திடீரென ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அமல ஜோதின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை பறித்துள்ளார். அமலஜோதி திருடன் திருடன் என சத்தம் போட்டார்..இந்த போராட்டத்தில் நகையின் ஒரு பவுன் டாலர் அமலஜோதியின் கையில் கிடைத்தது. ஆறு பவுன் நகை மர்ம நபரின் கையில் சிக்கியது. அந்த நகையுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து அமல ஜோதி ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.