பெண்ணிடம் பேசியதை தட்டிக் கேட்ட தொழிலாளிக்கு கத்திகுத்து !

பெண்ணிடம் பேசியதை தட்டிக் கேட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Update: 2024-03-12 04:56 GMT

 வழக்கு பதிவு

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள நரிப் பாலம் பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெகன் மிக்கேல்ராஜ் (38). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் இருக்கும் போது மத்தியாஸ் நகர் பகுதியை சேர்ந்த சஜின் (23) என்பவர் அவரது வீட்டின் அருகே ஒரு பெண்ணிடம் பேசி கொண்டு  இருந்ததாகவும், இதனை மரிய ஜெகன் மிக்கேல் ராஜ் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த சஜின் இவரது வீட்டினுள் நூழைந்து தகாத வார்த்தையால் பேசி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக மரிய ஜெகன் மிக்கேல்ராஜ் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் சஜின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News