வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !
வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 11:19 GMT
காவல் நிலையம்
பிணவறை
வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, மேட்டு திருக்காம்புலியூர், அர்ஜுன தெருவை சேர்ந்தவர் குமார் மகன் வினோத் குமார் வயது 23. இவரது மனைவி பவ்யா வயது 25. வினோத் குமாருக்கு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டார். ஆயினும் அவருக்கு வயிற்று வலி நிற்கவில்லை. இதனால், விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த வினோத்குமார், மார்ச் 4ஆம் தேதி காலை 10 மணி அளவில், அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி பவ்யா அதிர்ச்சி அடைந்ததோடு, இதுகுறித்து மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த வினோத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.