லால்குடி தாலுக்கா அலுவலகம் முன்பு சுற்றி திரிந்த வாலிபர் மாயம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு சுற்றி திரிந்த வாலிபர் திடீரென மாயமானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 08:44 GMT
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதான முருகேசன். இவருக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி லால்குடியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு சுற்றி திரிந்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென முருகேசன் மாயமானார்.
இதுகுறித்து அவரது மாமா லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.