செங்கம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

செங்கம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-14 16:00 GMT
கோப்பு படம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 25), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் வாசுதேவன்பட்டு பகுதியில் வசிக்கும் உறவினரின் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து சைல்ட் லைன் மூலம் செங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News