திருப்பூரில் சிறுமியை ஏமாற்றிய வாலிபர் போக்சோவில் கைது

திருப்பூரில் 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-07-01 15:21 GMT

கோப்பு படம் 

திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் 13 வயது பள்ளி மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.  புகாரின் அடிப்படையில் வடக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளி மாணவியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் பாபு என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து பெங்களூரில் இருந்த பள்ளி மாணவியை போலீசார் மீட்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் , 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் பாபு (31) என்பவர் திருப்பூர் வெங்கமேடு பகுதியில் தங்கி வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஏற்கனவே 2 திருமணங்கள் ஆன நிலையில் 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார். திருச்செந்தூர் சென்று பிறகு பெங்களூரில் தங்கியுள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெங்களூரில் இருந்து சிறுமியை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வினோத் பாபு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News