இறையான்குடி கோவிலில் ஆனி பெருவிழா

கீழ்வேளூர் அருகே இறையான்குடி சேவுராய மூர்த்தி ஐய்யனார், செல்லியம்மன், காத்தவராயன் கோயிலில் 27ம் ஆண்டு ஆனி பெருவிழா நடைபெற்றது.

Update: 2024-07-01 05:51 GMT

சேவுராய மூர்த்தி ஐய்யனார்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இறையான்குடி சேவுராய மூர்த்தி ஐய்யனார், செல்லியம்மன், காத்தவராயன் கோயில் 27ம் ஆண்டு ஆனி பெருவிழா கடந்த 28ம் தேதி கணபதி, சாஸ்தா ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று பெண்கள் பூந்தட்டு சீர்வரிசை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மஹா அபிஷேகம் செல்லியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. 29ம் தேதி சேவுராயமூர்த்தி ஜய்யனாருக்கு சந்தகாப்பு அலங்காரம் நடைபெற்றது நேற்று உதிர்வாய் துடைத்தலுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை இறையன்குடி கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News