தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2024-01-31 09:29 GMT

 தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும், அந்நாளில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Tags:    

Similar News