மறைமலை நகரில் பேனர் முறிந்து விழுந்து விபத்து

மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளது.

Update: 2024-06-14 13:01 GMT
மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர் முறிந்து விழுந்து விபத்து

செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஜார் சாலை, நெடுஞ்சாலை ஓரங்களில், விதிகளை மீறி பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. 

 இந்நிலையில், நேற்று மாலை மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. காற்றின் காரணமாக, மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மின் தடை ஏற்பட்டது.

மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டு இருந்த, அரசியல் கட்சியின் பேனர், பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, அந்த நேரத்தில் பேனர் அருகில் யாரும் இல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News