விதிமீறிய 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலியில் குடியரசு தினத்தை முன்னிட்டு விதிமுறைகள் மீறி செயல்பட்ட 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-27 01:15 GMT

திருநெல்வேலியில் குடியரசு தினத்தை முன்னிட்டு விதிமுறைகள் மீறி செயல்பட்ட 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு விதிமுறைகள் மீறி செயல்பட்ட 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி ஒருங்கிணைந்த தொழில்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News