உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு கூடுதல் இடம்!

உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு கூடுதல் இடம்

Update: 2023-12-29 10:57 GMT

உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட்

உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 7 ஏக்கர் 85 சென்ட் இடத்தில் முதல்கட்டமாக, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக ஒரு ஏக்கர் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அளவிடும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய கமிஷனர் தங்கவேல், நகராட்சி கமிஷனர் காந்தி, நகராட்சித்தலைவர் சகுந்தலா, வருவாய்த்துறை, நகராட்சி, ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக அளவிடப்படும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் பல ஆண்டுகளாக கடைகள் வைத்துள்ளனர். விரிவாக்கப்பணிக்காக இந்த இடம் சேர்க்கப்படும் நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

Similar News