அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை-எஸ். பி வேலுமணி!

அதிமுக தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என எஸ். பி வேலுமணி பேச்சு

Update: 2024-02-17 09:18 GMT

எஸ். பி வேலுமணி!

கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படவில்லை எனவும் எடப்பாடியார் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின்னர்தான் பாதி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டது என தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை தற்போது பெறுபவர்களுக்கு அதை நிறுத்தி விட முடியாது எனவும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் திமுக நடத்தும் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் உதவித் தொகை பணம் நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள் அப்படியெல்லாம் வழங்கபடும் பணத்தை நிறுத்த முடியாது எனவும் உதவித் தொகை வழங்குவதை நிறுத்துவதற்கு நாங்கள் விட்டு விட மாட்டோம் எனவும் தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Tags:    

Similar News