விவசாய குறைத்தீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 23ஆம் தேதி விவசாய குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல் கூட்டம்

Update: 2024-02-20 16:14 GMT

ஆட்சியர் வளர்மதி

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியர் அலுவலக காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, பால்வளத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துக்கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்குமாறு ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News