தலைவர்களின் சிலைகளுக்கு அதிமுக வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சுழி பகுதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2024-03-22 13:26 GMT

திருச்சுழி பகுதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் திருச்சுழி நகர்ப் பகுதியில் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் சிலைகளுக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் டாக்டர் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்கு வேட்பாளர் ஜெயபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கத்தாளம்பட்டி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நரிக்குடி அருகே உள்ள மருதுபாண்டியர் திருவுருவச் சிலைக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மறையூர் கிராமத்தில் பெண்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக வெற்றி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News