பொதுமக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கிய அதிமுக நிர்வாகி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் அதிமுக நிர்வாகி ராஜகுமார் பொதுமக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினார்.

Update: 2024-05-14 07:45 GMT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் அதிமுக நிர்வாகி ராஜகுமார் பொதுமக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினார்.


தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கழகக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். இதில் எட்டையபுரம் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News