அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழா: முன்னாள் எம்பி பங்கேற்பு

திருச்சி மாவட்டம் பூவாளூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் எம்பி ப.குமார் இன்று பங்கேற்றார்.

Update: 2024-03-20 10:50 GMT

திருச்சி மாவட்டம் பூவாளூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் எம்பி ப.குமார் இன்று பங்கேற்றார்.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரைச் சேர்ந்தவர் சேவல் சிவமூர்த்தி.இவர் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளராக பதவி வகித்தார்.இவருடைய மனைவி மஞ்சுளாதேவி காட்டூர் கிளை கழக மேலமைப்பு பிரதிநிதியாக உள்ளார்.இவர்களின் இல்லத் திருமண விழா பூவாளூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று.இவ்விழாவிற்கு வருகை தந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார் தனது கரங்களால் திருமாங்கல்யத்தை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி,மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் சுபத்ராதேவி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி சார்ஜ், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தர்மதுரை,முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ், புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ்,ஒன்றிய கவுன்சிலர் ஹென்றி பிரபா,கண்ணாக்குடி ரவி,மாவட்ட ஐடி விங் இணை செயலாளர் ஜெயசீலன், மாவட்ட ஐடி விங் துணை தலைவர் தினேஷ்குமார்,ஒன்றிய பாசறை செயலாளர் ஆலங்குடி பாலாஜி,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பெருவை.ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News