மணல் கொள்ளையைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டம்

அணைக்கட்டில் சட்டவிரோத மண் மற்றும் மணல் கொள்ளையை கண்டித்தும், மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதி செய்து செய்து கொடுக்காததை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-23 04:47 GMT

ஆர்ப்பாட்டம் 

 வேலூர்மாவட்டம், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேலூர் புற நகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி முனுசாமி தலைமையில் நடந்தது இதில் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இந்த ஆர்பாட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் ஏரிகளில் மண் மற்றும் கல்குவாரி மண் மற்றும் மணல் சட்டத்திற்கு புறம்பாக திருடப்படுகிறது இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசைக்கண்டித்தும் ,மேலும் பீஞ்சமந்தை பாலாம்பட்டு மலை வாழ் மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி தராததை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடந்தது இதில் திரளானோர் பங்கேற்றனர் கோஷங்களையும் எழுப்பினர்
Tags:    

Similar News