தட்டுப்பாடின்றி நீர் கிடைக்க அதிமுக செயலாளர் வேண்டுகோள்

திருநெல்வேலி மாநகரில் தட்டுப்பாடின்றி நீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-03 09:32 GMT

திருநெல்வேலி மாநகரில் தட்டுப்பாடின்றி நீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இன்று (மே 3) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாநகரில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டு பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி நீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News