ஆலங்குளம் : பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் திமுக எம்பி

பாவூர்சத்திரத்தில் இன்று நடைபெறும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் கலந்து கொள்கிறார்.

Update: 2024-06-30 06:44 GMT

ராணி ஸ்ரீகுமார் எம்பி 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News