ஆலங்குளம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்

ஆலங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2024-06-22 02:47 GMT

ஆலங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று குரங்குகள் ஜோடியாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளில் உள்ள நீர்த்தொட்டிகளை உடைத்து வீட்டின் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்களை குரங்குகள் அச்சுறுத்தி வருவதால் அபாயகரமான சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்த குரங்குகளை பிடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News