அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுவரை 28 தற்காலிக பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-10 04:19 GMT

பேருந்து இயக்கம் 

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் 2ஆம் நாளாக தமிழகம் முழுவதூம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் . இப்போராட்டத்தில் அதிமுக, பாமக, பாஜக,  சி ஐ டி யு வை சேர்ந்த தொழிற்சங்ககள் இறங்கியுள்ளன. தொமுச மற்றும் பல்வேறு தொழிலாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக மயிலாடுதுறை பணிமனையில் 70 பேருந்துகளும் பொறையார் பணிமனையில் 26 பேருந்துகளும் சீர்காழி பணிமனையில் 21 பேருந்துகளும் கால அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறையில் தற்காலிக பணியாளர்களாக 12 நபர்களும் பொறையாரில் 5 நபர்களும் சீர்காழியில் 14 நபர்களும் தேர்வு செய்யப்பட்டு பணி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News