திருத்தங்கல் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி கூட்டம்

சிவகாசி அருகே திருத்தங்கல் காவல் நிலையத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Update: 2024-03-21 01:49 GMT

சிவகாசி அருகே திருத்தங்கல் காவல் நிலையத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


சிவகாசி அருகே திருத்தங்கல் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. விருதுநகர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் அனைத்து அரசியல்,கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில்,சிவகாசி உட்கோட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதற்கு இன்ஸ்பெக்டர் வேதவள்ளி, எஸ்ஐ கார்த்திக் தலைமை தாங்கினர்.கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சுமூகமாக நடத்துவது, பொதுக்கூட்ட இடங்கள், தெருமுனை கூட்ட இடங்கள், பிரசார அனுமதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் குறித்து போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.இதில் திமுக சார்பாக ரஜேஷ்,மாரீஸ்வரன், அதிமுக சார்பாக கிருஷ்ணமூர்த்தி,அமமுக சார்பாக சி.எம்.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,பாஜக,உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News