அனைத்து கட்சி கூட்டம்

விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் போலீஸ் டிஎஸ்பி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2024-03-19 10:34 GMT
 விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் போலீஸ் டிஎஸ்பி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

விருதுநகரில் அனைத்து கட்சி கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்த நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது இந்த தேர்தல் நடத்திய விதியை அரசியல் கட்சியினர் மீறி செயல்படக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகரில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் அனைத்து கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் மக்கள் நீதி மையம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைத்துக் கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இதில் விருதுநகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதமான நடவடிக்கைகளை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் பிரச்சாரம் குறித்து எப்பொழுது அனுமதி பெற வேண்டும் பிரச்சாரத்தின் பொழுது ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து கட்சியினருக்கு எடுத்துக் கூறினார். அதை தொடர்ந்து அங்கு இருந்த கட்சி பிரதிநிதிகள் தங்களுடைய சந்தேகங்களை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ராவிடம் கேட்டறிந்தனர்

Tags:    

Similar News