தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணை வேண்டும்: டிடிவி தினகரன்
ராமநாதபுரம் பரமக்குடி அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-19 15:13 GMT
செய்தியாளர்களை சந்தித்த தினகரன்
ராமநாதபுரம் பரமக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு நகர் செயலாளர் சத்தியமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அமமுக கழக பொதுச் செயலாளர் டி வி தினகரன் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கூறிய பொழுது அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இதுதான் அனைவரின் விருப்பம் மேலும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற வேண்டும் என எண்ணுகிறார்கள்.
அதை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசுடன் முதல்வர் ஸ்டாலின் பேசி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.