புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் வேதனை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புதிய பேருந்து நிலையத்தை இரவு நேரங்களை அரசு பேருந்துகள் புறக்கணிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 09:06 GMT

மாவட்ட செயலாளர்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வழித்தடத்தில் பாபநாசம், தென்காசி, புளியங்குடி, வள்ளியூர் ஆகிய அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து நாகர்கோவிலுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த அரசு பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் களக்காடு புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் புறக்கணித்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர் என புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News