திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
Update: 2024-03-22 12:17 GMT
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணிக்காக கணினி சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியாஆனந்த்,உதவி ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா விஜயன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.