சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

Update: 2023-12-25 15:03 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து...*

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஓ. மேட்டுப்பட்டியில் சுந்தர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு அறை முற்றிலும் வெடித்து சிதறி தரைமட்டமானது. தொழிலாளர்கள் வருமுன்பு ஏற்பட்ட விபத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.

விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின் போது எஞ்சிய ரசாயன மூலப்பொருட்களை இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக ரசாயன மூலப்பொருள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News