சிவகாசி அருகே மத்தாப்பு தயார் செய்யும் ஆலையில் வெடி விபத்து

சிவகாசி அருகே கலர் தீப்பெட்டி மத்தாப்பு தயார் செய்யும் ஆலையில் வெடி விபத்தில் ஒரு அறை சேதம் அடைந்தது.

Update: 2024-05-07 09:36 GMT

சிவகாசி அருகே தீப்பெட்டி கலர் மத்தாப்பு தயார் செய்யும் ஆலையில் பயங்கர வெடி விபத்து.ஒரு அறை முற்றிலும் சேதம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சார் கிராம பகுதியில் சிவகாசி சேர்ந்த கிரகத்துரை மகன் அதிபதி என்பவருக்கு சொந்தமான அய்யன் கலர் மேட்ச் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் சிறுவர்கள் கொழுத்தி மகிழக்கூடிய தீப்பெட்டி கலர் மத்தாப்பு தயார் செய்யப்படுகிறது. பத்துக்கு அறைகள் கொண்ட இந்த ஆலையில் கெமிக்கல் அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அறையின் மேற்கூரை வெடித்தும் கட்டிடம் முழுமையாக சேதமடைந்தன. மேலும் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2 உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில்,

சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் வெங்கேடசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News