கிணற்றில் தவறி விழுந்த போதை வாலிபர் பலி

போதையில் சென்ற வாலிபன் கிணற்றில் தவறி விழுந்து பலி - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-21 11:15 GMT

பலி

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (20), வெல்டர். இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் தனது அத்தை சகுந்தலா வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகே போதையில் சென்ற சங்கர், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News